புல்வாமா தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
புல்வாமா தாக்குதலின் 7-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு இதே நாளில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.
இந்த துயர சம்பவத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், உயிரிழந்த வீரர்களின் தேசத்திற்கான சேவை நம் உணர்வில் என்றும் பதிந்திருக்கும் எனக் கூறியுள்ளார்.
















