பெண்களுக்கு திமுக அரசு வழங்கிய ஐந்தாயிரம் ரூபாய் தொகை என்பது தேர்தல் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது தமாகா சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கு விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன. முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த ஜி.கே.வாசனுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதனயடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அதிமுக தலைமையில் எங்களின் கூட்டணி வெற்றி பெறும் என உறுதிபட தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் திமுக அரசு தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருவதாகவும், தற்போது அறிவித்துள்ள ஐந்தாயிரம் ரூபாய் என்பது தேர்தல் நோக்கத்துடனே வழங்கப்பட்டுள்ளது எனவும் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார்.
















