சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும், ஊதிய உயர்வு, நேரடி ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தை சேர்ந்த பனியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என தெரிவித்த அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே 13வது நாளாக ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய பணியாளர்கள் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
















