சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
அரசு தேர்வுகளில் 40 சதவீத இடஒதுக்கீடு, தாமதமின்றி பணி நியமனம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12வது நாளாக நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில், திமுக அரசுக்கு எதிரான முழக்கம்0 எழுப்பப்பட்டது. அப்போது அங்கு வந்த போலீசார், போராட்டத்தை தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார், அனைவரையும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
















