குமரி மாவட்டம் குழித்துறை அருகே வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறையை சேர்ந்த டிக்ஷன் என்பவர், தனது மனைவின் இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர், சுவர் ஏறிக் குதித்து இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















