ஜெர்மனி அருங்காட்சியகத்தைவிட கீழடி பழமையானது என, செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 24 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அருங்காட்சியகம், கடந்த 13-ம் தேதி பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.
நேற்று முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், தனது குடும்பத்தினருடன் வருகை புரிந்தார். தொடர்ந்து, இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட விஸ்வநாதன் ஆனந்த், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பண்டைக்கால பகடைகள் மற்றும் ஆட்டக்காய்களைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடி அருங்காட்சியகம் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சமீபத்தில் ஜெர்மனியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்றிருந்ததாகவும், அதனைவிட கீழடி மிகவும் பழமையானது என்றும் தெரிவித்தார்.
















