அடுத்த ஒன்றரை வருடங்களில் வேலை வாய்ப்பு சந்தையில் ஏஐ மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என மைக்ரோசாப்ட் அதிகாரி முஸ்தபா சுலேமான் தெரிவித்துள்ளார்.
ஏஐ ஆதிக்கம் காரணமாக ஒயிட் காலர் வேலைகள் பெரும் சரிவைசந்திக்கும் என துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவு தலைவர் முஸ்தபா சுலேமான் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், தினசரி கணினி முன் அமர்ந்து சட்டம், கணக்கியல், மார்க்கெட்டிங் அல்லது திட்ட மேலாண்மை போன்றவற்றில் ஈடுபடுபவர்களின் வேலைகளை ஏஐ தானியங்கி முறையில் மேற்கொள்ளக் கூடும் என கூறினார்.
இது சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் எனவும் முஸ்தபா தெரிவித்தார்.
















