திருச்செந்தூரில் நடைபெற்ற ஆசிரியர்கள் கூட்டணியின் ஆண்டு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் வட்டார ஆண்டு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக ஆசிரியர்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், “நேரமில்லை” என்ற ஒற்றைத் தகவலுடன் அமைச்சர் விழாவைப் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கூறி கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினர் நடத்திய விழாவை அமைச்சர் வேண்டுமென்றே புறக்கணித்து சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.
















