கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் அடகு கடையின் ஷட்டரை உடைத்து 100 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை, திருச்சி சாலையில் சிங்காநல்லூர் பகுதியில் ரமேஷ்குமார் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். சிவராத்திரியை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளித்த அவர், குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் கடையின் ஷட்டரை உடைத்த மர்ம நபர்கள் 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















