பருத்தி விதைப்புக்காக சிறிய அளவில் ஆற்று மணலை எடுக்கும் விவசாயிகளை, மணல் கொள்ளை என்கிற பேரில் அதிகாரிகள் துன்புறுத்தக் கூடாது என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடைக்குப் பிறகு பச்சை பயிறு, உளுந்து மற்றும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் பருத்தியை விதைப்பதற்கு தட்பவெட்ப நிலை என்பது அவசியமாக உள்ளது.
இதன் காரணமாக அதற்கேற்ற வெப்பநிலை உள்ள ஆற்று மணலை சிறிதளவு நிரப்ப வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆகவே, மணலை எடுக்கும் விவசாயிகளை வருவாய் மற்றும் காவல்துறையினர் துன்புறுத்தக் கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















