கொடைக்கானல் அண்ணா பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளால், பயணிகள் மத்தியில் அச்சமான சூழல் நிலவுகிறது.
கொடைக்கானலில் வனவிலங்குகள் நடமாட்டம் சமீபகாலமாகவே அதிகரித்துள்ளது.
இவை ஊருக்குள் நடமாடுவது மட்டுமின்றி, விவசாய நிலங்களை சேதப்படுத்துவதுடன், மனிதர்களையும் அவ்வப்போது தாக்கி வருகின்றன.
இதனால் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் காட்டெருமைகள் முகாமிட்டுள்ளதால், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் துரத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















