அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீநிவாசய்யா என்ற மாணவர், சான் பிரான்சிஸ்கோவின் யூ.சி.பெர்கேலே பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வந்தார்.
இந்த நிலையில், கடந்த பிப்.14-ஆம் தேதி அவர் திடீரென காணவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் சான் பிரான்சிஸ்கோ போலீஸார் இந்திய மாணவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் காணாமல்போன மாணவர் சாகேத் ஸ்ரீநிவாசய்யாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
மேலும், மாணவர் மரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
















