2 மாதங்களுக்குப் பிறகு புதிய சிறைக்கு இம்ரான் கான் மாற்றப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 85% வரை கண் பார்வை பறிபோயுள்ளது சமீபத்தில் மருத்துவக் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 2 மாதத்திற்கு பிறகு இஸ்லாமாபாத்தில் புதியதாக திறக்கப்படவுள்ள சிறைக்கு இம்ரான் கான் மாற்றப்படுவார் என சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
















