சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் அகில பாரத கோஷ் தினத்தை கோலாகலமாக கொண்டாடினர்.
மகா சிவராத்திரியை ஒட்டி நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் அகில பாரத கோஷ் தினம் கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலிலும், அகில பாரத கோஷ் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அப்போது சுமார் 50க்கும் மேற்பட்டோர் சிவ வாத்தியங்களை வாசித்தனர். இந்த நிகழ்வை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
















