விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் அருகே நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்வில், பாமகவினர் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.
திண்வனத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை விழா நடைபெற்றது.
அப்போது பக்தர்கள் பலர், காளி, அம்மன், சிவன் உள்ளிட்ட தெய்வங்களின் வேடங்களை அணிந்து ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் அருகே ஊர்வலம் வந்தபோது, பாமகவினர் நடனமாடினார். இதனால் ஊர்வலம் தொடர்ந்து செல்வது தடைபட்டது.
இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சுவாமி ஊர்வலம் தொடர்ந்து செல்ல நடனமாடுவதை நிறுத்துமாறு அவர்களிடம் கூறினர்.
எனினும் காவல்துறையின் அறிவுரையை பொருட்படுத்தாமல் பாமகவினர் தொடர்ந்து நடனமாடினர். இதனால் போலீசார் திடீரென தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
















