விருதுநகரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள மாணிக்கம் தாகூருக்கு ஆதரவளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், கிழக்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் செயற்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, காங்கிரசுக்கு அதிக சீட்டு, உள்ளாட்சியில் 30 விழுக்காடு பங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை தேசிய தலைவர் கார்கேவிடம் முன்வைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
மேலும், மாணிக்கம் தாகூரின் நிலைப்பாட்ட ஆதரிப்பதாகவும் விருதுநகர் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
















