கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அரசு அலுவலகங்கள் போன்ற முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள தலைமை நீதிமன்றத்திற்கு மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையறிந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையில் ஈடுபட்டனர்.
பின்னர் இது புரளி என்பது தெரியவந்ததால் மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















