தமிழகத்தில் காலியாகும் மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மகாராஷ்டிரா ஒடிசா மேற்குவங்கம் அசாம் பிஹார் சத்தீஸ்கர் ஹரியானா இமாச்சலப் பிரதேசம் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 37 உறுப்பினர்களுடைய பதவி காலம் ஏப்ரல் முடிவடைகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வரும் ஏப்ரல் இரண்டாம் தேதியுடன் பதவி காலம் நிறைவடையுள்ள நிலையில் அதற்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
அந்த வகையில் மார்ச் 16ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது,
மார்ச் 16ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் – என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி 26ம் வெளியாகும், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 5ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 6, வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
















