ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லட்சுமி நாராயணன் நகரை சேர்ந்தவர் ஆடிட்டர் ராஜன். இவர் மதியம் வெளியே சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியபோது, பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் 60 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. ஆடிட்டர் ராஜன் வெளியே கிளம்பியதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், மறைவான இடத்தில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து கதவை திறந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
















