இந்தியா – அமெரிக்கா இடையே AI இணைப்பை அதிகரிக்க கடல்சார் கேபிள் வழித்தடத்தை உருவாக்க உள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் AI உச்சி மாநாட்டில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, நாளை பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதற்காக இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற கூகுள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்தியா – அமெரிக்கா இடையே AI இணைப்பை அதிகரிக்க கடல்சார் கேபிள் வழித்தடத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான AI கட்டமைப்பு மற்றும் இணைய இணைப்பு பலமடங்கு அதிகரிக்கும் என்றும் இது உலகளாவிய AI தொழில்நுட்பப் பகிர்வுக்குப் பாலமாக அமையும் என்றும் கூறினார்.
















