ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வரும் 24ம் தேதி நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் சசிகலா பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சசிகலா விடுத்துள்ள செய்தி குறிப்பில், ராமநாதபுரம் மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திடலில், வரும் 24ம் தேதி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும், அதில் சசிகலா பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சாதி, மத வேறுபாடுகளின்றி அனைவரும் பங்கேற்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
















