ஏஐ சிப்களை உருவாக்கும் பணியில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், AI தொழில்நுட்பம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
செமிகண்டக்டர் உற்பத்தியிலும் டாடா குழுமம் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார். அதேபோல் ஏஐ Chip-களை உருவாக்கி வருவதாக கூறிய அவர், தொழில்துறை சார்ந்த, AI Chip-களை உருவாக்குவதே நோக்கம் என தெரிவித்தார்.
















