டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ மாநாட்டில் 24 மணி நேரத்தில் இரண்டரை லட்சம் மாணவர்கள், உறுதிமொழிகளை ஏற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
டெல்லியில் சர்வதேச ஏஐ உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பிரான்ஸ், பிரிட்டன், தென்கொரியா உள்பட 20 நாடுகளின் தலைவர்களும் மற்றும் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
இந்தநிலையில் மாநாடு தொடங்கிய முதல் நாளில் ஏஐ பயன்பாட்டுக்கான உறுதிமொழியை 2 லட்சத்து 50 ஆயிரத்து 946 மாணவர்கள் எடுத்து கொண்டனர். இது கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. பாரத் மண்டபத்தில் நடந்த இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை நடுவரால் அங்கீகரிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான சான்றிதழ் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வழங்கப்பட்டது.
















