கன்னியாகுமரி மாவட்டம் தோட்டத்துமடம் பகுதியில் சத்ரபதி சிவாஜி பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இதனையொட்டி இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழாவில் உரையாற்றிய பாஜக மாவட்ட தலைவர் ஆர்.டி. சுரேஷ், இந்திய நாட்டிற்கு ஊக்க சக்தியாக சத்ரபதி சிவாஜி திகழ்வதாக கூறினார்.
சுதந்திரம் கிடைத்த 100வது ஆண்டை கொண்டாடும்போது பொருளாதார வளர்ச்சியில் முதல் நாடாக இந்தியா மாறும் எனவும் அவர் கூறினார்.
















