திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பதிவிட்ட வங்கதேசத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தங்கி பணியாற்றும் வங்கதேசத்தை சேர்ந்த சிலர், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.
பல்லடம், ஊத்துக்குளி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட இடங்களில் டெல்லி க்யூ பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 6 பேரை டெல்லி கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 16 சிம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
















