ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 9 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் புதுக்கோட்டையில் பறிமுதல் செய்யப்பட்டன. ‘
ரகசிய தகவலின் அடிப்படையில் புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான 4 பேர் 7 பெட்டிகளுடன் நின்றிருந்தனர்.
இதையடுத்து அந்த பெட்டிகளை போலீசார் சோதனை செய்தபோது அதில் 4 லட்சத்து 82 ஆயிரம் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். போதை மாத்திரை கடத்தலின் பின்னணி மற்றும் முக்கிய குற்றவாளிகளை கண்டறிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, புதுக்கோட்டை எஸ்பி அபிஷேக் குப்தா தெரிவித்துள்ளார்.
















