ஸ்பெயினில் அமைந்துள்ள சாக்ரடா ஃபேமிலியா தேவாலயம், உலகின் மிக உயரமான தேவாலயம் என்ற வரலாற்று சாதனையை எட்டியுள்ளது.
பார்சிலோனா நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த தேவாலயத்தின் கட்டுமானங்கள் கடந்த 145 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த தேவாலயத்தின் உச்சியில் 100 டன் எடைகொண்ட, கண்ணாடி மற்றும் எஃகால் உருவாக்கப்பட்ட சிலுவை நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவாலயத்தின் உயரம் இறுதி செய்யப்பட்டாலும், அதன் மற்ற கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த தேவாலயத்தின் உச்சியிலுள்ள சிலுவையில் அமைக்கப்படும் பார்வை மேடையில் இருந்து பார்சிலோனா நகரை முழுமையாக காணும் வசதி பொதுமக்களுக்காக விரைவில் தொடங்கவுள்ளது.
















