உலகப் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனி பெயர்ச்சியை முன்னிட்டு நளதீர்த்தத்தில் சப்த நதிகள் ஆராதனை ஆரத்தி விழா நடைபெற்றது.
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில், சனிப்பெயர்ச்சி விழா வருகிற மார்ச் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு உலக நன்மை வேண்டி நளதீர்த்தத்தில் ஸ்ரீ சொர்ண கணபதி ஹோமம், மஹா சங்கல்ப்பம் சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் யானை மீது தங்க பூரண கும்பம் ஏற்றி, நளதீர்த்த குளத்தின் நான்கு வீதிகள் வழியாக, தருமை ஆதீன திருமுறை பாடசாலை மாணவர்களால் திருமுறை பாராயணம் பாடப்பட்டு, நள தீர்த்தத்தில்
பூஜை நடைபெற்றது. தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
















