கன்னியாகுமரி மாவட்டத்தில், அரசு நிலத்தில் இருந்து விலை உயர்ந்த மரங்கள் மற்றும் பாறைகள் கடத்தப்படுவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைகடை பேருராட்சிக்கு உட்பட்ட கல்லுவிளை பகுதி அமைந்துள்ளது.
இங்கே சிற்றாறு பட்டிணங்கால் கிளை கால்வாய் அருகே, நீர்வள ஆதாரத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் இருந்து, விலை உயர்ந்த மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதுடன், ஜெலட்டின் குச்சிகள் மூலம் பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்படுவது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
ஆனால் அரசியல் தலையீட்டால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
















