நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு போகாராவில் இருந்து தலைநகர் காத்மாண்டுவிற்கு 44 பயணிகளுடன் அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. தாடிங்கில் என்ற பகுதிக்கு வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்கு உள்ள ஆற்றில் கவிழ்ந்தது.
இதில் 17 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து மீட்பு படையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டூ, அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
















