ஜம்மு காஷ்மீரில் குண்டடிபட்டபோதும் பின்வாங்காத ராணுவ நாய் பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்ல உதவியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
கிஷ்ட்வார் மாவட்டத்தின் சத்ரூ பகுதியில் பயங்கரவாதகளை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.
அப்போது ராணுவத்தின் பாரா பிரிவை சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த டைசன் எனும் நாயை பாதுகாப்பு படையினர் அழைத்து சென்றனர்.
அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், நடத்திய துப்பாக்கிச் சூட்டில், டைசனின் காலில் தோட்டா பாய்ந்து படுகாயமடைந்தது. இருப்பினும் பின்வாங்காத டைசன் தொடர்ந்து முன்னோக்கி சென்று பயங்கரவாதிகள் இருப்பிடத்தை காண்பித்தது.
















