திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் கந்த சஷ்டி பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது
திருப்பரங்குன்றம் தீப தூணில் தொடர்ந்து தீபம் ஏற்ற வலியுறுத்தி, திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் கந்த சஷ்டி கவச பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில், இந்து முன்னணி சார்பில், திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது.
கன்னியாகுமரியில் உள்ள வீதிகள், வீடுகள் மற்றும் கோயில்களில் முருகன் படம் வைத்து அறுபடை வீடுகளை குறிக்கும் வைகையில் ஆறு விளக்குகள் ஏற்றி கந்தசஷ்டி பாடப்பட்டது. இதேபோன்று இந்து முன்னணி, இந்து இயக்கங்கள், சமயவகுப்பு மற்றும் பாஜக சார்பில் மாவட்டம் முழுவதும் ஜோதி வேண்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது
மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பாட முருக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் அமர்ந்து பக்தர்கள் கந்த சஷ்டி பாடினர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உலகப் புகழ்பெற்ற ஸ்ரீமுத்துமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி பாராயணம் பாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி அமைப்பினர், பாஜகவினர் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
















