திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, முன்விரோதம் காரணமாக இருதரப்பினர், கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் ஜெயசீலன் என்பவரது தரப்பினருக்கும், கோபாலகிருஷ்ணன் தரப்புக்கும் இடையே, சாலை அமைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கிராம பொதுக்குளத்தை ஏலம் விடும் நிகழ்ச்சியில் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கிக்கொண்டதில் இருதரப்பிலும் 9 பேர் காயமடைந்தனர்.
இதில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. காயமடைந்தவர்கள், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















