ஆப்பிரிக்க நாடான சோமாலியா பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான சோமாலியா பாகிஸ்தானிடமிருந்து 24 ஜே. எஃப். – 17 தண்டர் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.
சீனா மற்றும் பாகிஸ்தானின் கூட்டு முயற்சியால் தயாரிக்கப்படும் இந்த இலகு ரக போர் விமானம், கடந்தாண்டு இந்தியாவுக்கு எதிரான ஆபரேசன் சிந்தூர் சண்டையில் பயன்படுத்தப்பட்டது.
அப்போது ஜே. எஃப். – 17 தண்டர் ரக போர் விமானங்கள் திறம்பட செயல்பட்டதாக பாகிஸ்தான் உலக அரங்கில் பொய் கூறி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானின் விளம்பரத்தை நம்பி ஜே. எஃப். – 17 தண்டர் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வது தொடர்பாக, பாகிஸ்தானுடனான சோமாலியாவின் 90 கோடி டாலர் ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோமாலியாவில் தொடா் வறட்சி மற்றும் அதிகரித்து வரும் மோதல்களால் சுமார் 44 லட்சம் மக்கள் உணவின்றி தவிக்கின்றனா். அப்படியிருக்கையில் 90 கோடி டாலர்களை வளர்ச்சிப் பணிக்கு பயன்படுத்தாமல், பாகிஸ்தானிடம் விமானம் வாங்கி சோமாலியா ஏமாறப் போவதாக உலக நாடுகள் விமர்சித்து வருகின்றன.
















