கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கண்டகாணப்பள்ளியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான லட்சுமி நாராயணா என்பவர், கடந்த 2018-ம் ஆண்டு பணத்தகராறில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் விசாரணை முடிவடைந்ததால் தீர்ப்பளித்த நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் உயிரிழந்ததால் மீதமுள்ள 6 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
















