சேலத்தில், வாங்கிய சிகரெட்டுக்கு பணம் தர மறுத்து, மதுபோதையில் தேநீர் கடையை இளைஞர் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு சென்ற இளைஞர் சிகரெட் வாங்கியுள்ளார்.
அதற்கு கடையில் இருந்த கேஷியர் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
போதை தலைக்கேறிய நிலையில், டீக்கடையில் இருந்த பொருட்களை அந்த இளைஞர் சேதப்படுத்தியதுடன், கேஷியர் மற்றும் டீ மாஸ்டரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதையடுத்து அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
















