திருவள்ளூர் அருகே, கஞ்சா போதையில் பீகார் மாநில தொழிலாளர்கள் இருவரை அரிவாளால் வெட்டி, பணம் மற்றும் செல்போன்களை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பூவலம்பேடு சிப்காட் அருகே பீகாரை சேர்ந்த லலித் மற்றும் சஞ்சித் மண்டல் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது, மூன்று பேர் கொண்ட மர்மக்கும்பல் இருவரையும், கை கால்களில் அரிவாளால் வெட்டிவிட்டு, ஐந்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சிறுவாடா கிராமத்தைச் சேர்ந்த கௌதம், தானிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த விஷ்வா, பாதிரிவேடு கிராமத்தை சேர்ந்த சின்னா என்கிற தினகரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















