நகராட்சி நிர்வாகத்துறை முறைகேடு தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழித்துப்புத் துறை வழக்குப் பதிவு செய்யாமல் உள்ளது.
நகராட்சி நிர்வாக துறையில் டெண்டர் மற்றும் பணி நியமனத்தில் சுமார் ஆயிரத்து 20 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பான ஆதாரங்களுடன் தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு கடந்தாண்டு அக்டோபரில் கடிதம் அனுப்ப்பட்டது.
அதன் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை வலியுறுத்தியது. ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலம் தாழ்த்தி வந்த நிலையில், அதற்கு எதிராக அதிமுக எம்.பி இன்பதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், முறைகேடு தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இதுவரை வழக்குப் பதிவு செய்யாமல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
















