மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர்.
செம்மணிப்பட்டியில் உள்ள ஆண்டிபாலகர் கோயிலுக்கு சொந்தமான செம்மணி கண்மாயில், விவசாய பணிகள் முடிந்தவுடன், பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நடந்த மீன்பிடி திருவிழாவில், செம்மணிப்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். கச்சா, வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு கட்லா, ரோகு, சிலேபி, விரால் என பல வகை நாட்டுரக மீன்களைப் பிடித்து, வீட்டிற்கு கொண்டு சென்று சமைத்து உண்டு மகிழ்ந்தனர்.
















