தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பள்ளி ஆசிரியர் மீது பொய்யான பாலியல் புகாரளித்த சக ஆசிரியை உட்பட 9 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நரியூத்து அரசு பள்ளி கணித ஆசிரியர் கோகில பாண்டியன் மீது, சக ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகியோர் பாலியல் வன்கொடுமை புகாரளித்திருந்தனர். இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக கோகில பாண்டியன், ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாகா கமிட்டி விசாரணை மூலம், முன்விரோதம் காரணமாக கோகில பாண்டியன் மீது பாலியல் புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் மொக்கத்துரை ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றச்சாட்டுக்கு உடந்தையாக இருந்த மேலும் 3 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
















