கொடைக்கானலில் மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையில் விரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், இந்த பிரதான சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சாலை விரிவாக்கத்திற்காக சுமார் ஆறு அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு சுமார் இரண்டு மாதங்களாக அது மூடப்படாமல் உள்ளது.
இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாலையை கடக்க சிரமமடைந்து வருகின்றனர். ஆகவே, சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
















