சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே போக்சோ வழக்கில் இருநூறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராமகிருஷ்ணன் என்ற ஜோதிடருக்கு மற்றொரு போக்சோ வழக்கில் மேலும் இருபது ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜாதகம் பார்க்க வந்த பெண்ணின் இரண்டு மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ராமகிருஷ்ணனுக்கு இருநூறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பளித்தது.
இந்நிலையில், பரிகார பூஜை எனக்கூறி, சிறுவனையும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த குற்றச்சாட்டில் தற்போது ராமகிருஷ்ணனுக்கு மேலும் இருபது ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
















