4 ஆண்டுகளாக நீளும் ரஷ்யா-உக்ரைன் போர் - சோர்ந்து விட்டதாக ஜெலன்ஸ்கி ஒப்புதல்!
Mar 15, 2026, 03:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4 ஆண்டுகளாக நீளும் ரஷ்யா-உக்ரைன் போர் – சோர்ந்து விட்டதாக ஜெலன்ஸ்கி ஒப்புதல்!

Manikandan by Manikandan
Feb 25, 2026, 08:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நான்காண்டு காலமாக ரஷ்ய போரால் முழுவதும் சோர்வடைந்து விட்டதாக கூறியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதற்காக ஒரு போதும் ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கையை எடுத்தது. நான்காண்டுகளுக்குப் பிறகும் ரஷ்யா உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு 1,418 நாட்களைத் தாண்டியது. இது இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியைத் தோற்கடிக்க அன்றைய சோவியத் யூனியன் எடுத்துக் கொண்ட அதே கால அளவு ஆகும்.

சொல்லப்போனால், நான்காண்டுகள் ஆகியும் இன்னமும் உக்ரைனின் கிழக்குப் பகுதியை முழுமையாக கைப்பற்ற முடியாமல் ரஷ்யா திணறுகிறதா? என்ற கேள்வியையும் சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மிகப் பெரிய நீண்ட போராக கருதப்படும் ரஷ்யா- உக்ரைன் போரில் இரு தரப்பிலும் கிட்டத்தட்ட 2 மில்லியன் வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது. பல லட்சக் கணக்கான மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு புலம் பெயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரே நாளில் ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினை அலாஸ்காவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி எடுத்தார்.

உடனடி போர் நிறுத்தத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரும்பினாலும், அதை நிராகரித்த ரஷ்ய அதிபர் புதின் ஒரு விரிவான அமைதி திட்டத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்த அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தான் போரின் நான்காவது ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ,போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுக்கு அமெரிக்கா போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

நாடும் மக்களும், ராணுவமும் மிகவும் சோர்வடைந்து விட்டதாக ஒப்புக் கொண்டுள்ள ஜெலன்ஸ்கி, ஆனாலும் ரஷ்யாவுடன் சரணடைய விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

ரஷ்ய அதிபரே ஒரு போர் என்றும் புதினின் பிடியில் ரஷ்யாவே சிறையில் இருப்பதாக தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி ஒரு தனி நபருக்கு எதிராகப் போராடும் ஒரு ஜனநாயக நாடான உக்ரைனுடன் தான் அமெரிக்கா நிற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ரஷ்யாவை விட வலிமையான அமெரிக்கா, ரஷ்யாவுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா முன்வைத்த அமைதி திட்டத்தில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் தெளிவாக இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள ஜெலன்ஸ்கி, வருங்காலத்தில் மீண்டும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால், உக்ரைனின் நட்பு நாடுகள் என்ன முடிவெடுப்பார்கள் ? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

வரும் ஜூன் மாதத்துக்குள் போரை நிறுத்தவேண்டும் என்று கெடு விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போரின் முடிவைக் குறிக்கும் சிறப்பு விழாவின் போது, ​​ரஷ்யாவுடனானஅமைதி ஒப்பந்தத்திலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான பாதுகாப்பு உத்தரவாத ஒப்பந்தத்திலும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஒரே நேரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன் ரஷ்யா- உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட ட்ரம்ப் ஆசைப்பட்டாலும் அது நடக்குமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

Tags: prsidentnever surrenderrussiaputinZelenskyUkrainian President
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்துவர அனுமதி இல்லை – பாஜக மாநில பொதுச்செயலாளர்!

Next Post

இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு – MODI HUG எப்போதுமே ஸ்பெஷலானது என பெஞ்சமின் நெதன்யாகு நெகிழ்ச்சி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies