கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் 9 பேரை விடுதலை செய்த கோபிச்செட்டிபாளையம் நீதிமன்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
கன்னட நடிகர் ராஜ்குமார், கடந்த 2000 ஆம் ஆண்டு சந்தன மரக் கடத்தல் வீரப்பன் தலைமையிலான குழுவினரால் கடத்தப்பட்டார்.
இந்த கடத்தல் தொடர்பாக வீரப்பன், சந்தன கவுடா, மல்லு, சேத்துக்குளி கோவிந்தன் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு வீரப்பன், அவருடைய கூட்டாளிகள் சந்தன கவுடா, மல்லு, சேத்துக்குளி கோவிந்தன் ஆகியோர் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மீதமுள்ள ஒன்பது பேர் மீதான வழக்கை விசாரித்த கோபிச்செட்டிபாளையம் நீதிமன்றம், அவர்களை விடுதலை செய்து கடந்த 2018 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து, கோபிச் செட்டிபாளையம் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
















