செர்பியாவில் விவசாய மானியங்களை உயர்த்தக் கோரி விவசாயிகள் 50-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் டிராக்டர்களை நிறுத்தி சாலைகளை முடக்கி உள்ளனர்.
செர்பியாவில் வெளிநாடுகளிலிருந்து மலிவான விலையில் பால் மற்றும் இறைச்சி இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்கக் கோரியும், விவசாய மானியங்களை உயர்த்தக் கோரியும் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கு அதிபர் அலெக்சாண்டர் வுச்சிக் தலைமையிலான அரசே காரணம் எனக் கூறி, அவர் பதவி விலக வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே போகாட்டிக் , கிசாச், ரூமா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களின் சந்திப்புகளில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களை நிறுத்தி விவசாயிகள் சாலைகளை மறித்துள்ளனர்.
பெல்கிரேட் முதல் ஜிரெஞ்சானின் வரையிலான நெடுஞ்சாலைகள் மற்றும் பல பிராந்திய சாலைகள் பல மணி நேரம் முதல் முழு நாள் வரை முடக்கப்பட்டுள்ளன.
இதனால் செர்பியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6% பங்களிப்பதோடு, 20% தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விவசாயத் துறை ஸ்தம்பித்துள்ளது.
















