இலங்கையில் ஈஸ்டா் குண்டுவெடிப்பு வழக்கில் உளவுத்துறை முன்னாள் தலைவா் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2019-இல், கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் பெரிய ஹோட்டல்களைக் குறிவைத்து ஈஸ்டா் பண்டிகை நாளில் தொடா் குண்டுவெடிப்புகள் நடந்தன.
உள்ளூா் பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதல்களில் இந்தியா்கள் உள்பட 270 போ் உயிரிழந்தனா்.
இந்த வழக்கில் அந்நாட்டின் உளவுத் துறை முன்னாள் தலைவா் சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டாா்.
ராணுவத்தில் மேஜா் ஜெனரலாக ஓய்வுபெற்ற சுரேஷ் சல்லேவை, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 3 நாள்கள் காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரிக்கவுள்ளனர்
















