தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இல்லை என தொடர் புகார் எழுந்து வருகிறது.
இந்நிலையில் சுகாதார நிலையத்திற்கு நாய் கடியால் காயமடைந்த சிறுவனை சிகிச்சைக்காக உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது அங்கு சிகிச்சை அளிக்க யாரும் இல்லாததால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தொடர்ந்து அங்கு வந்த மருத்துவ பணியாளரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
















