திருப்பூர் மாவட்டம் குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்
குமரிக்கல்பாளையத்தில் இந்தியாவிலேயே 32 அடி உயரமான நடுகல், முதுமக்கள் தாழிகள் மற்றும் பழங்காலப் பனை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருச்சி சரக கண்காணிப்பாளர் ஆரவல்லி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட தொல்லியல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கண்காணிப்பாளர் ஆரவல்லி, ஈரோடு கொடுமணலில் கிடைத்த ஆவணங்களை விடவும், குமரிக்கல்பாளையத்தில் கூடுதல் வரலாற்றுச் சான்றுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
















