டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 23 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தாய்லாந்தின் கிராபி நகரிலிருந்து ‘இண்டிகோ’ விமானம் மூலம் கடந்த 22ஆம் தேதி டெல்லி வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, இரண்டு பயணிகளின் பெட்டியில், சுமார் 23 கோடி ரூபாய் மதிப்பிலான 24 கிலோ எடையுள்ள கஞ்சா 14 பிளாஸ்டிக் பைகளில் மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கஞ்சா கடத்தி வந்த இரண்டு இந்திய பயணிகளையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















