பாகிஸ்தானில் பேருந்து பயணத்தின்போது பயணிகளைப் பாதுகாப்பு ஊழியர்கள் வீடியோ எடுக்கும் விசித்திரமான நடைமுறையைக் கண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த யூடியூபர் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த வீடியோ பிளாகர் ஒருவர், பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, அங்கு நீண்ட தூரம் செல்லும் ஏசி பேருந்தில் பயணம் செய்த அவர், இருக்கையில் அமர்ந்தபடி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் பேருந்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பேருந்தில் இருக்கும் ஒவ்வொரு பயணியையும் வீடியோ எடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த யூடியூபர், இதுபோன்ற நிகழ்வை எந்தவொரு நாட்டிலும் தாம் பார்த்ததில்லை என்றும், இது மிகவும் விசித்திரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், அந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
















